search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் மறியல்"

    பொன்னமராவதி சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் துடைப்பத்துடன் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
    பரமக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அந்த சமுதாய மக்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வழிமறிச்சான் கிராம மக்கள் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

    பார்த்திபனூர்–கமுதி செல்லும் சாலையில் 150 பெண்கள் உள்பட 250–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு துடைப்பம், மிதியடிகளுடன் சுமார் 1 மணி நேரமாக பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் பகிர்வு செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பஸ்கள், லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன.

    தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பரமக்குடி சங்கர், கமுதி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    கூடலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக உள்ளது. இங்கு 21 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் அனைத்து பகுதியிலும் சேரும் குப்பைகள் பெத்துக்குளம் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டன. இதனால் அப்பகுதி மலைபோல் குவிந்து காணப்பட்டது. அடிக்கடி அங்கு தீ வைக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுச் சூழல் மாசுபட்டது.

    எனவே 8 மற்றும் 10 வது வார்டு பொதுமக்கள் குப்பைக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பம் நகராட்சி குப்பைக்கிடங்கில் தற்காலிகமாக கொட்டப்பட்டு வந்தது.

    2 மாதத்துக்குள் மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 மாத கால அவகாசம் முடிந்து விட்டதால் கம்பம் குப்பைக்கிடங்கில் கடந்த 10 நாட்களாக குப்பை கொட்ட முடியவில்லை. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் அல்லாமல் தேங்கி கிடந்தன.

    நகராட்சியின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து கூடலூர் - குமுளி சாலையில் இன்று பொதுமக்கள் பஸ் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் கூடலூர் வடக்கு, தெற்கு போலீசார் சமரசம் செய்தும் கேட்கவில்லை.

    1 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இன்று மாலைக்குள் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    ×